எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்று விழா
- எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்று விழா நடந்தது.
- திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது ஆண்டு ெதாடக்க விழாவையொட்டி திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நம்புதாளை எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தின் கொடிகம்பத்தில் கிளை செயலாளர் ஜியாவுதீன், கிழக்கு கடற்கரை சாலையின் கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் துணை தலைவர் சாகுல் ஹமீது, குத்பா பள்ளி கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் செயலாளர் கலபத்த சகுபர் சாதிக், தொண்டி செக்போஸ்ட் கொடிகம்பத்தில் தொண்டி நகர் செயலாளர் ரிஸ்வான், வட்டாணம் சாலை கொடிகம்பத்தில் தொண்டி நகர் துணை தலைவர் பாதுஷா, கடற்கரை எதிரே மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், தொண்டி அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் புகாரி ஆகியோர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் தொகுதி அமைப்பு செயலாளர் நாசர் அலி, பொருளாளர் அப்துல் மஜீத், சமூக ஊடக அணியின் மாவட்ட செயலாளர் முஜாஹிதீன், தொண்டி மேற்கு கிளை செயலாளர் ஹீசைன், மேலும் அன்சார் அலி, பாதுஷா, ஹாஜா, அஸ்கர், ஹபீப், அர்ஷத், ராவுத்தர் ஆலிம், அப்ரீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.