உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-09-27 08:22 GMT   |   Update On 2022-09-27 08:22 GMT
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
  • துணை மின் நிலையம் உள்ளிட்ட பணிகளை வெளி நபா்களுக்கு வழங்குதலைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

தமிழகத்தில் மின்வாரிய அலுவலகங்களில் புதிய ஊழியா்கள் நியமனம் அந்தந்த அலுவலகம் தரப்பிலே நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது அரசு ஒப்புதல் அளித்த பின்னர் பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவை ரத்து செய்யக்கோருதல் மற்றும் துணை மின் நிலையம் உள்ளிட்ட பணிகளை வெளி நபா்களுக்கு வழங்குதலைக் கைவிட வேண்டும். முத்தரப்பு பேச்சுவாா்த்தை ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் குருவேல் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் காசிநாதன், பொறி யாளா்கள் சங்கத் தலைவா் கங்காதரன், செயலாளர் மலைச்சாமி, ஐக்கியப் பொறியாளா்கள் சங்கச் செயலாளர் ரவி, மாநிலச் செயலாளர் சாமியய்யா உள்பட மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்ட மைப்பினா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News