உள்ளூர் செய்திகள்

பேராசிரியர் கருணாகரனுக்கு சிறந்த ஆய்வாளர் விருது வழங்கப்பட்டது.

பேராசிரியருக்கு சிறந்த ஆய்வாளர் விருது

Published On 2022-10-07 06:55 GMT   |   Update On 2022-10-07 06:55 GMT
  • ராமநாதபுரம் அருகே கல்லூரி பேராசிரியருக்கு சிறந்த ஆய்வாளர் விருது வழங்கப்பட்டது.
  • செய்யது அம்மாள் கல்லூரி இயற்பியல் துறை, திருச்சி ராமன் ஆய்வு குழுமம் இணைந்து 2 நாட்கள் பண்பாட்டுக் கருத்தரங்கு நடத்தியது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை-மதுரை சாலை அருகே உள்ள சருகனி இதயா மகளிர் கல்லூரி, செய்யது அம்மாள் கல்லூரி இயற்பியல் துறை, திருச்சி ராமன் ஆய்வு குழுமம் இணைந்து 2 நாட்கள் பண்பாட்டுக் கருத்தரங்கு நடத்தியது. இதயா கல்லூரி இயற்பியல் துறை தலைவர் ஹெலன் வரவேற்றார். முதல்வர் ஜோதி மேரி தலைமை தாங்கினார். வித்யாகிரி கல்லூரியின் ஆராய்ச்சி ஆலோசகர் சந்திரமோகன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். சர்வதேச அளவில்100-க்கும் மேற்ப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த ஆய்வாளர்கள் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் திருவாடானையைச் சேர்ந்த கருணாகரன், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் வளனரசு ஆகியோருக்கு சிறந்த ஆய்வாளர் விருதும், திருச்சி தேசியக் கல்லூரிப்பேராசிரியர் ரவிச்சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News