உள்ளூர் செய்திகள்

விவசாயி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-01-16 11:43 IST   |   Update On 2023-01-16 11:43:00 IST
  • குடும்ப தகராறில் நடந்த விபரீதம்
  • விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 59). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனவிரக்தியடைந்த கண்ணன். மது போதையில் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிந்தனர். விரைந்து வந்த காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News