உள்ளூர் செய்திகள்

திரவுபதி முர்மு

பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை

Published On 2022-07-01 23:57 GMT   |   Update On 2022-07-01 23:57 GMT
  • திரவுபதி முர்மு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.
  • சென்னையில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

சென்னை:

ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார். சென்னையில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து ஆதரவு கேட்கிறார். மேலும் இன்று புதுச்சேரியிலும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.

திரவுபதி முர்மு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News