வடபுதுப்பட்டி, சின்னக்காம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
- துணை மின் நிலையத்தில் நாளை (செப்.28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செப்.28) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 4 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தேனி கர்னல், பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகம், சிவாஜி நகர், பாரஸ்ட் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், வடபுதுப்பட்டி, அரப்படித்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், உதவி மின்செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதன் காரணமாக சின்ன க்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூர், குத்திலுப்பை, சாமியாடிபுதூர், ஜ.வாடி ப்பட்டி, நரசிங்காபுரம், கொங்கபட்டி, ஜவ்வாது பட்டி, அண்ணாநகர், புல்லா க்கவுண்டனூர், நவக்கானி, சோழியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, மாம்பாறை,
அத்தப்ப ன்பட்டி, எல்லப்பட்டி, பாறைப்பட்டி, இடையன் வலசு, பெருமாள்கவுண்ட ன்வலசு, இ.கல்லுப்பட்டி, கக்கர நாயக்கனூர், வலையப்பட்டி, நாகப்பன்பட்டி, குளிப்பட்டி, ஓடைப்பட்டி, ஜோகிப்பட்டி, கோமாளிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.