உள்ளூர் செய்திகள்

இளம்பெண் கொலை வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

Published On 2022-06-26 07:17 GMT   |   Update On 2022-06-26 07:17 GMT
  • இளம்பெண் கொலை வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எடப்பாடி:

சேலம் எடப்பாடி, குடிசைக்குள் துர்நாற்றம் கொங்கணாபுரம் அடுத்த கோணசமுத்திரம் கிராமம் குப்பம்பட்டியை சேர்ந்தவர் ராதா (வயது 45). இந்த நிலையில் நேற்று இவரது குடிசை வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் பொதுமக்கள் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்கு ராதா நிர்வாண நிலையில் படுக்கையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் அதே ஊரை சேர்ந்த 4 -க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ராதா வேலை பார்த்த நூற்பாலையில் பணியாற்றிய சக ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News