உள்ளூர் செய்திகள்
- தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுத்தினர்.
தேனி:
தேனி மாவட்டம், சங்கராபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ஒரு சமூகத்தினர் அப்பகுதியில் தேவாரம் பகுதியில் இருந்து சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய அதே சமூகத்தை சேர்ந்த நபர் மாற்று சமூகத்தினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் தங்கள் சமூகத்தினரை மூளைச்சலவை செய்து வருவதாகவும், மேலும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதாகவும்,
அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதே சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர்.