உள்ளூர் செய்திகள்

விபத்து வழக்கில் ஒரு குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.1 கோடிக்கான ஆணை வழங்கப்பட்ட காட்சி. 

உடுமலையில் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி

Published On 2022-06-27 11:30 GMT   |   Update On 2022-06-27 11:30 GMT
  • அமர்வுகளில் மொத்தம் 340 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 60 ல் 57 முடித்து வைக்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலை நீதிமன்றங்களில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) 4 அமர்வுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் அமர்வில் மாவட்ட கூடுதல் நீதிபதி முரளிதரன், வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன், பட்டியல் வழக்கறிஞர் பஷீர் அகமது, அரசு வழக்கறிஞர் சேதுராமன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். 2 வது அமர்வில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், பட்டியல் வழக்கறிஞர் மகாலட்சுமி,அரசு தரப்பு வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். 3 வது அமர்வில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர்கள்,காப்பீட்டு அலுவலர்கள்,வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வுகளில் மொத்தம் 340 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 299 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில் சொத்து சம்பந்தமான வழக்குகள் 18 ல் 10 க்கு தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 60 ல் 57 முடித்து வைக்கப்பட்டது. வங்கி வாராக்கடன் வழக்குகள் 25 ல் 2 க்கு தீர்வு கிடைத்தது. மேலும் சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள் 222 எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் முடித்து வைக்கப்பட்டது. ஜீவனாம்சம் மற்றும் விவாகரத்து வழக்குகள் 4 ல் 1 க்கு தீர்வு கிடைத்தது. செக் மோசடி வழக்குகள் 6 ல் 2 முடித்து வைக்கப்பட்டது.பிராமிஸரி நோட்டு வழக்குகள் 5 விசாரணைக்கு எடுக்கப்பட்டு 5 ம் முடித்து வைக்கப்பட்டது.ஆக மொத்தம் ரூ. 5 கோடியே 28 லட்சத்து 87 ஆயிரத்து 641 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மோட்டார் வாகன விபத்தில் சிவப்பிரகாசம் என்பவர் உயிரிழந்த வழக்கில் நஷ்ட ஈடு கேட்டு அவருடைய மனைவி ஜோதிலட்சுமி சார்பில் வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், ரமேஷ் பிரபு, மணிவாசகம் ,பிரபு ,ரேஷ்மா, கோகுல்ராஜ் ஆகியோர் ஆஜரானார்கள். தனியார் காப்பீட்டு நிறுவனம் சார்பில் கோவையை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஆஜரானார். இந்த வழக்கில் சமரச உடன்பாடு ஏற்பட்டு மனுதாரருக்கு ரூ .1 கோடி இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் ஒத்துக் கொண்டதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Tags:    

Similar News