உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி சாவு

Published On 2022-08-09 06:37 GMT   |   Update On 2022-08-09 06:37 GMT
  • விழுப்புரம் அருகே லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி இறந்தார்.
  • புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வெளிமாநில லாரி ஒன்று சென்றது.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே அண்ணாநகர் அனிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது 55) இவர் நேற்று இரவு வளவனூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வெளிமாநில லாரி ஒன்று சென்றது. அப்போது வளவனூர் பஸ் நிறுத்தம் அருகே லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நடந்து சென்ற ஜோதி மீது மோதியது. இந்த விபத்தில் ஜோதி சம்பவ இடத்திலே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னசபாபதி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News