உள்ளூர் செய்திகள்
சூலூர் அருகே கழிவு துணிகளில் பற்றி எரிந்த தீ
- கரும்புகையின் காரணமாக கண் எரிச்சல் மற்றும் மூச்சு அடைப்பு ஏற்பட்டது.
- கழிவுத்துணிகளை கயிறு தயாரிப்பதற்காக குவித்துள்ளனர்.
சூலூர்:
சூலூர் முத்து கவுண்டன்புதூர் அருகே தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தினர் கழிவுத்துணிகளை கயிறு தயாரிப்பதற்காக குவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் துணி குவியல்கள் பற்றி எரிந்தன. துணி பாலிஸ்டர் வகையைச் சேர்ந்தது என்பதால் அப்பகுதி இருந்து கருமையான புகை வெளியேறியது. வெளியேறிய புகை அருகில் உள்ள குரும்பபாளையம், செங்கோட கவுண்டன் புதூர், அரசூர் ஆகிய பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் மூச்சு திணறல் எடுத்ததால் உடனடியாக சூலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கரும்புகையின் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.