உள்ளூர் செய்திகள்
காரிமங்கலம் அருகே பொம்மை வியாபாரி சுருண்டு விழுந்து பலி
- காரிமங்கலம் அருகே பொம்மை வியாபாரி உயிரிழந்தார்.
- திடீரென சுருண்டு விழுந்து அவர் இறந்தார்.
காரிமங்கலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (58). கோவில் திருவிழாக்களுக்கு சென்று பிளாஸ்டிக் பொம்மை உட்பட பல்வேறு விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளி பஞ்சாயத்து குள்ளன் கொட்டாய் பகுதியில் வசித்து வரும் தனது நண்பரான குப்பன் என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
நேற்று குப்பன் வீட்டிற்கு சென்ற பழனி திடீரென மயங்கி விழுந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக காரிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.