பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
- ஆவணம் சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வருகிறது.
- எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அருகில் வந்து நிலை தடுமாறி விபத்துக்கு ஆளாகின்றனர்.
பேராவூரணி:
பேராவூரணி பேரூராட்சி யில் பட்டுக்கோட்டைசாலை, அறந்தாங்முதன்மைச் சாலை, சேதுபாவாசத்திரம் சாலை, ஆவணம் சாலை ஆகிய இடங்களில்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது. பட்டுக்கோ ட்டை சாலை, முதன்மைச் சாலை, அறந்தாங்கி சாலை யில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.ஆவணம் சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
ஆவணம் சாலையில் ஒரு பக்கத்தில் மழை நீர் வடிகால் முடிக்கப்பட்டு, அங்கிருந்து சாலையின் மற்றொரு பக்கம் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்காலுடன் இணைப்பதற்காக குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதி பணி முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகிறது. எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அருகில் வந்து நிலை தடுமாறி விபத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே எச்சரிக்கை பலகை வைக்கவும், சாலை பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை த்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.