உள்ளூர் செய்திகள்
- தண்ணீர் லாரி மோதி மூதாட்டி பலியானார்.
- ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெயிலா மீது மோதிய தண்ணீர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் வெயிலா (வயது 65). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் தனது சுப்பிரமணி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பொருட்கள் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றார். அப்போது அவர் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெயிலாைவ மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெயிலா மீது மோதிய தண்ணீர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.