உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் பாண்டி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.

பாண்டி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-27 07:40 GMT   |   Update On 2022-06-27 07:40 GMT
  • சோழவந்தான் பாண்டி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், நிர்வாகிகள் கேசவன், முருகன், ஆதிமுத்துகுமார் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள மேட்டுநீரேத்தான் கிராம காவல் தெய்வமான பாண்டிமுனீஸ்வரர் கோவில் கும்பாபிசேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் முன்னிலையில் யாகசாலை அமைத்து பூஜைகள் தொடங்கி கணபதி ஹோமம், நவகிரக பூஜை, செய்து மங்கள வாத்தியங்கள் மேளதாளத்துடன் புனிதநீர் குடத்தை தாங்கி கோவிலை வலம் வந்து சக்தி பீடம் மற்றும் சுவாமிக்கு புனித தீர்த்த நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனைகள் காட்டி பக்தர்கள் வணங்கினர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதனை கண்ட பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், நிர்வாகிகள் கேசவன், முருகன், ஆதிமுத்துகுமார் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News