உள்ளூர் செய்திகள்

விடுதியில் வாலிபர் மர்ம சாவு

Published On 2022-06-27 08:31 GMT   |   Update On 2022-06-27 08:31 GMT
  • மதுரை விடுதியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  • அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

மதுரை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லிப்பூடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் நேற்று மதுரை வந்திருந்தார். அவர் மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார்.

அதன்பிறகு நீண்ட நேரமாக அவர் தங்கிய அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகிகள் திடீர்நகர் போலீசில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு செந்தில்குமார் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News