உள்ளூர் செய்திகள்

கலுங்கில் நீர் பங்கீட்டை வலியுறுத்தும் கல்வெட்டு

கலுங்கில் நீர் பங்கீட்டை வலியுறுத்தும் கல்வெட்டு

Published On 2022-06-30 09:49 GMT   |   Update On 2022-06-30 09:49 GMT
  • கலுங்கில் நீர் பங்கீட்டை வலியுறுத்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
  • கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை குறித்த கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலுங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

வில்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் அனந்தகுமரன், தங்கப்பாண்டி, அஜய் ஆகியோர் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

உவரி பெரிய கண்மாய் கலுங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது. கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் பளிங்கு பகுதியில் லிங்க வடிவத்தில் தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இதை படி எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை குறித்த கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.

உவரி பெரிய கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கிழக்கு பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனி தூண் கல்லில் 5 அடி உயரம், 1 அடி அகலம், 6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இதை ஆய்வு செய்தபோது முதல் 2 வரிகள் முற்றிலும் தேய்மானம் ஏற்பட்டு காணப்படுகிறது. காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

உவரி பெரிய கண்மாயில் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூர்க்கு நீரை பணிக்கர் என்ற இனக்குழுவினர் சரிபாதியாக பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை களல்வெட்டு மூலம் அறியலாம். தற்போது கண்மாயில் இருந்து கலுங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News