வீட்டில் விபசாரம் ; 3 பெண்கள் மீட்பு
- மதுரை செல்லூரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
- 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
மதுரை
மதுரை செல்லூர், அம்பேத்கர் நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மூதாட்டி உள்பட 3 பெண்கள் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது வெங்கடா சலபதி மனைவி சந்திரேஸ்வரி என்ற சந்திரா என்ற ஐஸ் சந்திரா (வயது 61) என்பவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் திருச்சி மாவட்டம், தீரன் நகரைச் சேர்ந்த 35 வயது பெண் மற்றும் தூத்துக்குடி, சிவன் கோவில் சத்திரத்தை சேர்ந்த 29 வயது பெண் ஆகிய 2 பேரை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடு த்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.