உள்ளூர் செய்திகள்

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் செங்கோல் நினைவு பரிசு வழங்கினர். அருகில் நிர்வாகிகள் ரமேஷ், ராஜ்சத்யன், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பைக்காரா கருப்புசாமி, முத்துவேல், பரவைராஜா, ஆர்.கே.ரமேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர். 

ஊழல் பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2022-09-30 07:17 GMT   |   Update On 2022-09-30 07:44 GMT
  • ஊழல் பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
  • தேர்தல் வாக்குறுதியில் சொத்துவரி, மின்கட்டணம் உயர்த்தப்படாது.

மதுரை

ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மதுரை பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது-

மீனாட்சியம்மன் அருளால் மதுரையில் இன்று பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. மதுரை எப்போதுமே புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் கோட்டையாகும். கடந்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது கடந்த தேர்தலில் அதிமுக சற்று கவனக்குறைவாக இருந்த காரணத்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தமிழகத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. சாவி கொடுத்தால் பொம்மை சுற்றி வருவது போல முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலையிலிருந்து மாலை வரை சுற்றி வருகிறார் இவரது சுற்றுப்பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிவிட்டன இதனால் என்ன நன்மை கிடைத்து இருக்கிறது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திமுகவுக்கு வாக்களித்த மக்கள் இப்போது வருத்தப்பட்டு வருகிறார்கள். திமுக ஆட்சி எப்போது போகும் என்று சொல்ல தொடங்கிவிட்டனர் மதுரையில் உள்ள ஒரு அமைச்சர் அறிவு ஜீவி அவருக்கு தான் அறிவு இருக்கிறது என்று நினைக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம் ஆனால் திமுக இதுவரை எந்த திட்டத்தையாவது கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?.

கருணாநிதிக்கு நூலகமும் நினைவு மண்டபமும் கட்டி வருகிறார்கள் கடலிலும் கருணாநிதியின் பேனா வைப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள் எழுதாத பேனாவுக்கு எதுக்கு 89 கோடியில் திட்டம்.

கடந்த அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்கப்பட்டது மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உலக தமிழ்ச் சங்கம் ஆம்னி பஸ் நிலையம் பெரிய ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டிடம் புற்றுநோய் சிகிச்சை மையம் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள் தடுப்பணைகள் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம் ஆனால் திமுக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே தொடங்கி வைத்து வருகிறது யாரோ பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது போல உள்ளது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம் மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி ஏழைப் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் ஆகியவற்றை நிறுத்திவிட்டார்கள் தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண உதவித்தொகை உயர்த்துவோம் என்று கூறினார்கள் ஆனால் இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் அதுபோல முதியோர் ஓய்வூதிய தொகையும் அதிகரிப்போம் என்று சொல்லி தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைத்து விட்டார்கள் இதுபோல மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றாமல் ரத்துசெய்து கொண்டிரு க்கிறார்கள்.

தி.மு.க.வின் இந்த செயல்பாடுகள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும் தேர்தல் வாக்குறுதியில் சொத்துவரி மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று திமுக சொல்லியிருந்தது ஆனால் இப்போது 100 சதவீதம் சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது மின் கட்டணத்தையும் அதிகரித்து விட்டார்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை திமுக அமைச்சர் இழிவாக பேசுகிறார். இதுதான் திராவிட மாடலா? தேர்தலில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக மறந்து விட்டது.

இது எல்லாமே நடிப்பு என மக்கள் தற்போது புரிந்து கொண்டார்கள் மதுரையில் ஒரு அமைச்சர் தனது மகன் திருமணத்தை ரூ. 30 கோடியில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார்.

கோவையில் அவருக்கு எங்கிருந்து இந்த பணம் வந்தது எல்லாம் கமிஷன் கலெக்சன் கரப்ஷன் தான் அரசு பணிகளில் ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் கரூரில் போடாத சாலைக்கு நிதி எடுக்கிறார்கள் இதுதான் திராவிட மாடலா? எனவே அதிமுகவை ஊழல் செய்தது என்று சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது ஓட்டு போட்ட மக்களுக்கு திமுக அரசு வேட்டுவந்துவிட்டது ஏழை எளியவர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் இந்த அரசு வஞ்சித்து விட்டது இதன் மூலம் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஏமாற்றிய ஒரே அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் நினைவு பரிசு வழங்கப்பட்டது இதனை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் ராஜன் செல்லப்பா ஆகியோர் வழங்கினர் .

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, மதுரை நகர நிர்வாகிகள் வில்லாபுரம்ராஜா, திரவியம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், மாவட்ட துணை செயலாளர் கணேஷ் பிரபு, பரவை ராஜா, வில்லாபுரம் ரமேஷ், பி.ஆர்.சி.மகாலிங்கம் பைகாரா கருப்புசாமி, முத்துவேல், பாசறை ஜெயரீகன், முன்னாள் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News