உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டம்

குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-06-28 09:46 GMT   |   Update On 2022-06-28 09:46 GMT
  • மதுரை தெற்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரையில் 4 மண்டலங்கள் உள்ளன. இங்கு பொது மக்களின் குறை களை, மேயர் இந்திராணி வாரம் ஒரு நாள் வீதம் கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

முனிச்சாலை சி.எம்.ஆர் ரோட்டில் உள்ள 4-வது (தெற்கு) மண்டலத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது. இதில் மேயர் இந்திராணி கலந்து கொண்டார்.

அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட மேயர், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரி களிடம் அறிவுறுத்தினார்.

குறைதீர்க்கும் முகாமில் ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News