உள்ளூர் செய்திகள்
- டி.மேட்டுப்பட்டி அரசு பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது.
- 1,200 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றிய அளவிலான குறுவட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. குழு செயலாளர், தலைமை ஆசிரியர் சந்திரன், இணைச் செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் ராஜன் தலைமை தாங்கினர்.
பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரங்கநாயகி தொடங்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, உணவு பொருள் பாதுகாப்பு பகுப்பு ஆய்வாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் அழகர்சாமி ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 பள்ளிகள் கலந்து கொண்டன. கபடி, கோகோ, கேரம் உள்பட 12 வகையான விளையாட்டுகளில் சுமார் 1,200 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.