உள்ளூர் செய்திகள்

கைதான ராஜா, முருகன்

கஞ்சாவுடன் 2 பேர் கைது

Published On 2022-06-30 10:19 GMT   |   Update On 2022-06-30 10:19 GMT
  • மதுரையில் 1.250 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது கணவன்-மனைவி தப்பி ஓடி விட்டனர்.
  • பதுங்கி இருந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. போலீசார் அவர்களில் 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மதுரை

மதுரை ஆனையூர், இந்திரா நகரில் கணவன்- மனைவி உள்பட 4 பேர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் வசந்தா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார்கள்.

அங்கு பதுங்கி இருந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. போலீசார் அவர்களில் 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஆணையூர், கருப்பசாமி நகரை சேர்ந்த முருகன் (59), உசிலம்பட்டியை அடுத்த கீழப்பட்டி ராஜா (28) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

அப்போது செல்லூர் கீழத்தோப்பு தங்கபாண்டி, அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோருக்கு கஞ்சா விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கஞ்சா விற்ற முருகன், ராஜாவை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய தங்கபாண்டி- மகாலட்சுமி தம்பதியை தேடி வருகின்றனர்.

வைகை தென்கரை, சோனை முத்தையா கோவில் எதிரே, வாலிபர் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி கஞ்சா விற்ற மேலூரையடுத்த செம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த மலைவீரன் மகன் நவீன் குமார் (20) என்பவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News