உள்ளூர் செய்திகள்

தஞ்சமடைந்த காதல்ஜோடி

வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி

Published On 2022-06-26 04:46 GMT   |   Update On 2022-06-26 04:46 GMT
  • 2 வருடமாக காதலித்த ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
  • இருதரப்பினர் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வடமதுரை:

வடமதுரை அருகே புத்தூர் பூசாரிபட்டியை சேர்ந்தவர் காட்டுராஜா மகன் வெள்ளிமுருகன்(22). இவருக்கும் அய்யலூர் கோம்பை பகுதியை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் இதற்கு காட்டுராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வீட்டைவிட்டு காதல்ஜோடி வெளியேறினர். அவர்களை பெற்றோர் தேடி வந்தநிலையில் அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமையில் பொதுமக்கள் காதல்ஜோடியை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

அங்கு இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மேஜர் என்பதால் காதல்ஜோடி விருப்பப்படி செல்லலாம். அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என பெற்ேறாரிடம் எழுதி வாங்கினர். அதன்பின்னர் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இருதரப்பினர் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News