உள்ளூர் செய்திகள்

கோவையில் போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி தற்கொலை

Published On 2022-06-30 09:48 GMT   |   Update On 2022-06-30 09:48 GMT
  • மது பழக்கத்துக்கு அடிமையான பன்னாரிமுத்துவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
  • சகோதரர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பன்னாரி முத்து பரிதாபமாக இறந்தார்.

கோவை:

கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பன்னாரிமுத்து (வயது 42).

கூலித் தொழிலாளி. திருமணமாகவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையான பன்னாரிமுத்துவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். 1½ வருடம் சிறையில் தண்டனை பெற்ற அவர் வெளியே வந்தார். பின்னர் தாயுடன் நீலிகோணாம் பாளையத்தில் வசித்து வந்தார்.

இவர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் பன்னாரி முத்துவுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அதற்கும் பதில் அளிக்கவில்லை.

இதனையடுத்து போலீசார் அவரது தாயை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் வேலைக்கு சென்ற மகன் வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து பன்னாரி முத்துவை அவரது சகோதரர் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அவர் காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அவரது சகோதரர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பன்னாரி முத்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News