உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி சரக அளவிலான டென்னிஸ் போட்டி அரசு பள்ளி மாணவிகள் சாதனை
- இரட்டையர் பிரிவில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
- இரட்டையர் பிரிவில் சாருஹாசினி, மேனாவதி ஆகியோர் 2ம் இடமும் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில் டென்னிஸ் போட்டியில் 14வயதிற்குட்பட்ட ஒற்றை யர் மற்றும்அதில், ஜாகீர்வெங்கடா புரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சரக அளவில் ஒற்றையர் பிரிவில் சாருஹாசினி முதலிடமும், இரட்டையர் பிரிவில் சாருஹாசினி, மேனாவதி ஆகியோர் 2ம் இடமும் பிடித்தனர்.
மாவட்ட அளவில் நடந்த ஒற்றையர் பிரிவில் சாருஹாசினி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், மாநில அளவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
டென்னிஸ் போட்டியில் சாதனை படைத்துள்ள மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. வெற்றி பெற்றுள்ள மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையசிரியர் (பொ) விஜய் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.