உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2022-08-16 08:02 GMT   |   Update On 2022-08-16 09:32 GMT
  • மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
  • வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி:

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் கௌஷிக்.இவர் தனது இருசக்கர வாகனத்தை வடக்கு ஆண்டாள் வீதியில் நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் கௌஷிக் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக தாராநல்லூரைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 20) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News