உள்ளூர் செய்திகள்
மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி பலி
- மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி பலியானார்
- நிலை தடுமாறி மோதி விபத்து
கரூர்:
கரூர் அருகே, மின் கம்பம் மீது பைக் மோதிய விபத்தில், கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கீழ்பாகம், ஆத்துார் பிரிவை சேர்ந்தவர் முருகவேல் (வயது 43) கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை கரூர், ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் திடீரென நிலை தடுமாறி எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் கீழே விழுந்த முருகவேல், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.