உள்ளூர் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து 20 இடங்களில் தெரு முனை கூட்டம்

Published On 2022-08-15 07:04 GMT   |   Update On 2022-08-15 07:04 GMT
  • மத்திய அரசை கண்டித்து 20 இடங்களில் தெரு முனை கூட்டம் நடைபெற உள்ளது
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

கரூர்:

கரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி தலைமையில் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற.

மாநில குழு உறுப்பினர் பாலா, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு கலந்து கொண்டு எதிர் கால பணிகள் குறித்து பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், ராஜூ, சக்திவேல், முத்துச்செல்வன், ராமமூர்த்தி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் இந்துத்துவ மற்றும் வேலையின்மை

விலைவாசி உயர்வை கண்டித்தும், ஜனநாயக உரிமைகள் பறிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும், கரூர் மாவட்டத்தில் 10ஆயிரத்துக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று பிரசுரம் விநியோகம் செய்யும் போராட்டம் வரும் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்திடுவது, கரூர் மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் மூலம் பிரசாரம் செய்திடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News