உள்ளூர் செய்திகள்

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-06-29 09:57 GMT   |   Update On 2022-06-29 09:57 GMT
  • ஆனி மாத அமாவாசையையொட்டி புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  • இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், தளவாப்பாளையம் மாரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், மண்மங்கலம் புதுகாளியம்மன், கோட்டைமேடு மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது

 கரூர் :

ஆனி மாத அமாவாசையையொட்டி புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதேபோல் சேமங்கி மாரியம்மன், நொய்யல் செல்லாண்டியம்மன், நத்தம்மேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், உப்புப்பாளையம் மாரியம்மன், பேரூர் அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதியம்மன், திருக்காடுதுறை மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பச்சை நிற பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், தளவாப்பாளையம் மாரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், மண்மங்கலம் புதுகாளியம்மன், கோட்டைமேடு மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News