உள்ளூர் செய்திகள்

கரூரில் சில பகுதிகளில் நாளை மின் விநியோகம் ரத்து

Published On 2022-06-28 09:22 GMT   |   Update On 2022-06-28 09:22 GMT
  • கரூரில் சில பகுதிகளில் நாளை மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது

கரூர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் கோட்ட செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஜெகதாபி மற்றும் லந்தக்கோட்டை பீடர்களில் நாளை (29ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஜெகதாபி பீடர், ராஜலிங்கபுரம், செல்லாண்டிபுரம், கள்ளபொம்மன்பட்டி, தெற்கு மாணிக்கபுரம், நத்தப்பட்டி, வடக்கு மாணிக்கபுரம், சுக்காம்பட்டிபுதூர், வெள்ளமடைப்பட்டி, அய்யம்பாளையம், பாலப்பட்டி, பொம்மணத்துப்பட்டி. லந்தக்கோட்டை பீடர், நன்னிபாறை, காணிகளத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, ராசான்கோவிலூர், லந்தக்கோட்டை, கன்னிமார்பாளையம், கரும்புளிப்பட்டி, முத்தக்காப்பட்டி, ஜெகதாபி தெற்கு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News