உள்ளூர் செய்திகள்
- குட்கா விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
- போலீசார் கடை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர
கரூர்:
கரூர் அருகே, தமிழக அரசால் தடைசெய்யப் பட்ட புகையிலை, குட்கா விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், கடை வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்றுக்கொண்டிருந்த தான்தோன்றிமலை, குறிஞ்சி நகரை சேர்ந்த அலமேலு(வயது60) என்பவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.