உள்ளூர் செய்திகள்

பசுபதீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

Published On 2022-09-27 07:05 GMT   |   Update On 2022-09-27 07:05 GMT
  • பசுபதீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
  • வரும் 4-ந் தேதி நிறைவடைகிறது

கரூர்:

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. "மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு, 10வது நாள் வெற்றி கொண்ட நிகழ்வை நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது'. நடப்பாண்டு நவராத்திரி விழா நேற்று இரவு தொடங்கி, வரும் 4-ந் தேதி நிறைவடைகிறது. நவராத்திரி காலங்களில் வீடுகள், கோவில்களில், பல்வேறு விதமான கொலு பொம்மைகள்வை க்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படும். இந்நிலையில், கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோழர் மண்டபத்தில், நேற்று இரவு நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. அதில், நுற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Tags:    

Similar News