உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

Published On 2022-09-27 07:10 GMT   |   Update On 2022-09-27 07:10 GMT
  • தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • விபத்தை தடுப்பதற்காக நடவடிக்கை

கரூர்:

கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் இணைகின்றன. பிரிவு சாலைகள் உள்ள பெரும் பாலான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. மேலும், சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளன. இதற்கு தடுப்புகளும் வைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு பள்ளங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கரூர் - சேலம் சாலையில் தளவாப்பாளையம் பிரிவில் பல விபத்துகள் நடந்துள்ளன. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனால், தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News