உள்ளூர் செய்திகள்

கரூரில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

Published On 2022-06-30 09:32 GMT   |   Update On 2022-06-30 09:32 GMT
  • தெற்கு பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்:

கரூர் தோகைமலை அருகே தெற்கு பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்த வடிவேலு (வயது 45) என்பவர் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News