உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மதுவிற்ற 9 பேர் கைது

Published On 2022-11-30 07:08 GMT   |   Update On 2022-11-30 07:08 GMT
  • சட்ட விரோதமாக மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்
  • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கரூர் :

கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர்கள் அழகுராம், மதியழகன் மற்றும் போலீசார், மாயனுார், சிந்தாமணிப்பட்டி, லாலாப்பேட்டை, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக திருநாதன் (வயது33), பழனிசாமி (45), சின்னபொண்ணு (49), மாயகிருஷ்ணன் (32), கருப்பாத்தாள் (50), மணிமேகலை (33), ரங்கராஜ் (52), மாணிக்கம் (55), முத்து (52)ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 275 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News