திங்கள் நகர் அருகே அரசு பஸ் -மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி
- எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ்மீது மோட்டார் சைக்கிள் மோதியது
- இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
கன்னியாகுமரி :
குளச்சல் உதியார்விளை யைச் சேர்ந்தவர் சுஜித் (வயது 27), தொழிலாளி.
இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் செட்டியார் மடத்தில் உள்ள உறவினர் பெண் வாணிஸ்ரீ (15) என்பவரை அழைத்து கொண்டு திங்கள் நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பூசாஸ்தான்விளை என்ற இடத்தில் சென்ற போது முன்னால் சென்ற அரசு பஸ்சை சுஜித் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ்மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் கீழே விழுந்த சுஜித் அரசு பஸ் பின்பக்க சக்கர த்தில் சிக்கி தலை நசுங்கி பலியானார். வாணிஸ்ரீ பலத்த காயமடைந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பஸ் டிரைவர் குமரேசன் (52) ) அளித்த புகாரில் பேரில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.