உள்ளூர் செய்திகள்

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Published On 2022-06-26 07:45 GMT   |   Update On 2022-06-26 07:45 GMT
  • கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை
  • இறந்தவர் கறுப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார்.

கன்னியாகுமரி:

குழித்துறை தாமிரபரணி ஆற்றின் சப்பாத்து கடவு பகுதியில் இன்று காலை பொது மக்கள் குளிக்க சென்றபோது 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மிதந்த உடலை மீட்டு கரை சேர்த்தனர். இறந்தவர் கறுப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். தலையில் காயம் உள்ள நிலையில் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக மிதந்தவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மிதந்த ஆண் உடலால் குழித்துறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News