உள்ளூர் செய்திகள்

குமரியில் இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்குகிறது

Published On 2022-06-26 07:26 GMT   |   Update On 2022-06-26 07:26 GMT
  • குமரி எல்லை பகுதியில் சோதனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
  • அதிகாரிகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதா ரத்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர். குமரி மாவட்டத்தை யொட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மாவட்ட எல்லைப் பகுதி களில் கண்காணிப்பு தீவி ரப்படுத்தப்பட்டுள்ளது.

களியக்காவிைள சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொேரானா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று 818 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 40 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேல்புறம் ஒன்றியத்தில் 10 பேரும், முன்சிறையில் 9 பேரும், அகஸ்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் ஒன்றியங்களில் தலா 2 பேரும், தக்கலை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு ஒன்றி யங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாகர்கோவில் மாநகர பகுதியிலும் கொரோனா தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று 9 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 23 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 450 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பாதிப்பு 500 நெருங்கி வருகிறது.

இதையடுத்து சுகாதா ரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை சேக ரித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் எல்லை பகுதியான களியக்காவிளையில் மட்டும் சோதனை நடைபெற்று வருகிறது. சூழால், நெட்டா பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News