உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் நாளை கருணாநிதி பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம்

Published On 2022-06-26 07:54 GMT   |   Update On 2022-06-26 07:54 GMT
  • மேயர் மகேஷ் அறிவிப்பு
  • சுப. வீரபாண்டியன் பேசுகிறார்.

நாகர்கோவில்:

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பென்னப்ப நாடார் திடலில் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் எனது(மகேஷ்) தலைமையில் நடைபெறும்.

இதில் சிறப்பு பேச்சாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளும்,அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Tags:    

Similar News