உள்ளூர் செய்திகள்

தக்கலையில் புகையிலை விற்பனை செய்தவர் கைது

Published On 2022-06-25 07:45 GMT   |   Update On 2022-06-25 07:45 GMT
  • தக்கலை போலீசார் சோதனை நடத்தினர்.
  • 20 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி:

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி கொல்லன் விளையை சேர்ந்தவர் கோலப்பன். இவர் இரணியல் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். இங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக தக்கலை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் சம்பவ இடம் விரைந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைைமயிலான போலீசார் சோதனை நடத்தி கோலப்பனை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News