உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் கணவன்-மனைவி மீது வழக்கு

Published On 2022-08-15 07:47 GMT   |   Update On 2022-08-15 07:47 GMT
  • பலரிடம் பணம் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை
  • அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல்

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 50). இவரது மனைவி ஷீபா (48).

இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மீனவர் யேசுதாஸ் (69) என்பவர் உட்பட பலரிடம் பணம் வாங்கி உள்ளனர். அதனை திருப்பி கொடுக்காத காரணத்தால் பணம் கொடுத்தவர்கள் பிரான்சிஸ் வீட்டில் சென்று கேட்டு உள்ளனர்.

சம்பவத்தன்று பணம் கேட்க சென்றவர்களை பிரான்சிஸ் அவரது மனைவி ஷீபா ஆகியோர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் பணம் திருப்பி கொடுக்கவில்லை.

இதையடுத்து குழித்துறை கோர்ட்டில் யேசுதாசன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குழித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் பிரான்சிஸ், அவரது மனைவி ஷீபா ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News