உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி பொய்கை ஓடை ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணி

Published On 2022-10-02 07:33 GMT   |   Update On 2022-10-02 07:33 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ஓடையின் மீது பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

நாகர்கோவில்:

பொய்கை அணையில் இருந்து வருகின்ற ஓடை யானது வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வந்து தாணு மாலையன்புதூர் மற்றும் நாகர்கோவில்- திருநெல்வேலி நெடுஞ்சா லையினை கடந்து வடக்கு பெருமாள்புரம், ஆலடிநகர் வழியாக ராமர்குளத்தை வந்து அடைகிறது.

இந்த ஓடையானது பல ஆண்டுகளாக தூர் வாரப்ப டாமல் செடி, கொடிகள் படர்ந்து சகதிகளாக காணப்பட்டதால் சுகாதார கேடு ஏற்படுகின்ற நிலை ஏற்பட்டதுடன் மழை காலங்களில் வெள்ளங்கள் சரியாக செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. இத னால் அப்பகுதி பொது மக்கள் இந்த பொய்கை ஓடையினை தூர் வார வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனால் நேற்று பொக் லைன் இயந்திரம் மூலம் ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கியது. ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் முன்னிலையில் கன்னியா குமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

மேலும் அப்பகுதி பொதுமக்கள் இந்த ஓடை யினை சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி யதற்கு நன்றி தெரிவித்த வுடன் இந்த ஓடையின் கரை ஓரமாக பொதுமக்கள் செல்லும் வசதியாக சாலை அமைத்து தர வேண்டும் எனவும், மேலும் சுகாதார கேடு ஏற்படாதவாறு இந்த ஓடையின் மீது பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பால கிருஷ்ணன், சுந்தரம் பிள்ளை, சுயம்புலிங்கம் சிவசங்கரன், வீரபாகு மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News