உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி

Published On 2022-08-16 07:01 GMT   |   Update On 2022-08-16 07:01 GMT
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று வீடு திரும்பும்போது பரிதாபம்

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 60).

இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கி ருந்து வீட்டுக்கு புறப்பட்டார். கல்லுக்கட்டி அருகே வரும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.

எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் பீர் முகமது மற்றும் மற்றோரு மோட்டார் சைக்கிளில் வந்த தேங்காய் பட்டினத்தை சேர்ந்த லிபின்(24),மருதம் கோட்டை சேர்ந்த ஜிஜோ (22) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீர்முகமது பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராபியா, ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News