உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-08-16 08:05 GMT   |   Update On 2022-08-16 08:05 GMT
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார்
  • உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் கோட்டப்புறத்தை சேர்ந்த பிஜூ மகன் சிபின் (வயது17).

10-ம் வகுப்பு படித்துள்ளார்.

நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சிபின் அவரது நண்பர் பிரின்சன் (19) ஆகியோர் கன்னியாகுமரி செல்வதற்கு ஊரிலிருந்து மோட்டார சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார சைக்கிளை சிபின் ஓட்டினார். பின்னால் பிரின்சன் அமர்ந்திருந்தார்.

அவர்கள் கொல்லங்கோடு, கருங்கல் குளச்சல் வழியாக கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டனர். நேற்றிரவு குளச்சல் அருகே பாலப்பள்ளம் குன்னன்விளையில் சென்ற போது சிபின் பைக் எதிர்ப்பாராமல் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த சிபின் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிபின் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

பிரின்சன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இது குறித்து சிபின் அண்ணன் ஜோயிசன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News