உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

Published On 2022-08-09 08:09 GMT   |   Update On 2022-08-09 08:09 GMT
  • ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் ரூ.50ஆயிரம ரொக்கம் மற்றும் 4 பவுன் நகை கொள்ளைபோனது.
  • மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்கள் வந்தும் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள சிலுவத்தூர் பனைமரத்துப் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 72). இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாத்திமாமேரி. இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ேஜம்ஸ்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளேசென்று பார்த்த போது 4 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன் ஜெயக்குமார் மற்றும் பரமசிவம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்கள் வந்தும் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

Tags:    

Similar News