உள்ளூர் செய்திகள்

இந்தியாவை வல்லரசாக மாற்ற சபதம் ஏற்போம்- விஜய் வசந்த் சுதந்திர தின வாழ்த்து

Published On 2022-08-15 05:19 GMT   |   Update On 2022-08-15 05:19 GMT
  • சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தலைவர்களையும் இந்நாளில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம்.
  • சரிந்து வரும் நமது நாட்டின் புகழை மீண்டும் உச்சிக்கு எடுத்துச் செல்வதற்கு நம் அனைவரது பங்களிப்பு இன்றியமையாதது

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தி:-

அனைவருக்கும் எனது 75 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 1947 ம் ஆண்டில் தாய்திரு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. நமது சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் உள்படப் பல தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தலைவர்களையும் இந்நாளில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம்.

முன்னாள் பிரதமர்கள் நேரு இந்திரா காந்தி நரசிம்ம ராவ் மன்மோகன்சிங் போன்ற பிரதமர்கள் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் இந்தியாவை வளர்ச்சியின் உச்சிக்கு எடுத்துச் சென்றனர். இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணி காக்க உயிர் கொடுத்த காந்தியடிகள் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோரையும் இந்நாளில் போற்ற வேண்டியது நமது கடமை.

இன்று நமது நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இந்தியாவின் தனித்தன்மை கேள்விக்குறி ஆகி வருகிறது. சரிந்து வரும் நமது நாட்டின் புகழை மீண்டும் உச்சிக்கு எடுத்துச் செல்வதற்கு நம் அனைவரது பங்களிப்பு இன்றியமையாதது. நமக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பேணி காக்க வேண்டியது குடி மக்களாகிய நமது அனைவரின் கடமை, நமது உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் போது அதைப் பேணி காக்க ஒன்றிணைந்து நாம் போராட வேண்டிய தருணம் இது. ஜாதி மத வேற்றுமைகள் இன்றி ஒன்றாகக் கூடி இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்ற சபதம் ஏற்போம். ஜெய்ஹிந்த்!

இவ்வாறு விஜய் வசந்த் கூறி உள்ளார்.

Tags:    

Similar News