உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் கனமழையால் சாலையில் வெள்ளம்
- சுற்றுலா பயணிகள் அதிகளவில் மேகமூட்டத்தை ரசித்தனர்.
- லேசான சாரல் மழை என காலையில் இருந்து மாலை வரை நீடித்தது.
ஏற்காடு:
ஏற்காட்டில் நேற்று காலை முதலே மேகமூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் மேகமூட்டத்தை ரசித்தனர். வெயிலின் தாக்கம் இல்லாமல் மிதமான வெயில், லேசான சாரல் மழை என காலையில் இருந்து மாலை வரை நீடித்தது. அதன் பின்பு மாலை 6 மணிக்கு கனமழை பெய்ய ஆரம்பித்து . சுமார் 1½ மணி நேரம் நீடித்த இந்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மலை பாதையில் வாகனங்கள் ஓட்ட முடியாத அளவுக்கு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். அதன் பின் இரவு முழுவதும் லேசான சாரல் மழையும் கடுமையான பணியும் காணப்பட்டது.