உள்ளூர் செய்திகள்

தூய்மைப்பணி நடந்த காட்சி.

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தூய்மைப்பணி

Published On 2022-06-29 09:58 GMT   |   Update On 2022-06-29 09:58 GMT
  • 15 வார்டுகளில் துப்புரவு பணி நடந்தது.
  • தேன்மொழி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி யில் 15 வார்டுகளில் 40-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

கடந்த மாதம் பெய்த கனமழையால் அனைத்துப் பகுதிகளிலும் புல், செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கின்றன.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் துப்புரவு மேற்பார்வையாளர் தேன்மொழி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அலுவலகம் அருகே நடைபெற்ற தூய்மைப் பணியை மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி மற்றும் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News