உள்ளூர் செய்திகள்

அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்

Published On 2023-08-09 10:02 GMT   |   Update On 2023-08-09 10:02 GMT
  • அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இந்திய தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது.
  • இணையதளத்தை பயன்படுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீட்டிற்கே வந்து பட்டுவாடா செய்யும் படி முன்பதிவும் செய்துகொள்ளலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரத்தின அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி, அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தேசியக் கொடி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இந்திய தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது. இதன் விலை ரூ.25 மட்டுமே ஆகும். இணையதளத்தை பயன்படுத்தி தபால்காரர் மூலமாக தங்களின் வீட்டிற்கே வந்து பட்டுவாடா செய்யும் படி முன்பதிவும் செய்துகொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ.25 மட்டுமே செலுத்தி, தேசியக்கொடியை பெற்றுக்கொண்டு, தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து சுதந்திரதின அமுதப்பெரு விழாவினை இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News