உள்ளூர் செய்திகள்

அரகண்டநல்லூர் அருகே ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைது

Published On 2022-08-10 07:36 GMT   |   Update On 2022-08-10 07:36 GMT
  • அரகண்டநல்லூர் அருகே ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைதுசெய்யப்பட்டார்.
  • ஆட்டோ ஓட்டி வந்தவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ்.

விழுப்புரம்:

அரகண்டநல்லூர்அருகே மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் அருகே டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 மூட்டைகளில் 2,100 குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.விசாரணை யில் ஆட்டோ ஓட்டி வந்தவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ், 42; எனவும் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உடனே ஆட்டோ, குட்கா மூட்டைகளை கைப்பற்றி, ரமேஷை கைது செய்தனர்.

Tags:    

Similar News